Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் அம்மாச்சத்திரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் கடந்த 2017ம் ஆண்டு சந்திராயன் விண்கலம் கட்டுமான பணிகளின் போதே நேரில் சென்று பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு குறிப்பிட்ட இலக்கை விண்கலம் அடையும் என்று இரவு முழுவதும் அப்பள்ளி மாணவ மாணவிகள் தொலைக்காட்சி முன்பு காத்திருந்தனர் இந்நிலையில் சிறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்கலம் குறிப்பிட்ட நேரத்தில் கால் பதிக்க முடியாமல் போனது.
இருந்த போதிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருவதால் குறிப்பிட்ட இலக்கை சந்திராயன் விண்கலம் விரைவில் அடைய வேண்டும் என இந்த பள்ளியில் 100 அடி நீளம் கொண்ட விண்கலத்தின் முன்னாள் கையில் தேசிய கொடியுடன் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களையும் வெற்றி பெற பிரார்த்தனைகளையும் செய்தனர் இந்த நிகழ்ச்சி காண்பவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.